Sunday, July 10, 2011

கண் சிகிச்சை முகாம் - 1

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கமும், கோவை அரவிந்த கண் மருத்துவமனையும் இணைந்து 03.07.2011 ஞாயிறு அன்று ஈரோடு கணபதிபாளையம் மற்றும் அரச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது.






கணபதிபாளையத்தில் நடைபெற்ற முகாமில் 283 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 130 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அரச்சலூரில் நடைபெற்ற முகாமில் 145 நபர்களுக்கு கண்பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில்58 நபர்கள் கண் அறுவைசிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் கோவை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.




இலவச கண்சிகிச்சை முகாம்களுக்கான ஏற்பாடுகளை திட்டத் தலைவர் அரிமா. தனவேல்முருகன், திட்ட இயக்குனர்கள் அரிமா. விஜயராகவன், லட்சுமி நாராயணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் முகாமில் மாவட்ட கண்ணொளித்திட்டத் தலைவர் அரிமா. D.ரவிச்சந்திரன், சங்கப் பொறுப்பாளர்கள் அரிமாக்கள் மகேஸ்வரன், குருசாமி, செந்தில்குமார், பாலகிருஷ்ணன், தமிழ்செல்வன், தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


முகாம் சிறக்க பொருளாதார உதவி செய்த அரிமாக்கள் ஸ்பிக்.ராஜேந்திரன், சீனிவாசன், குணசேகரன், தியாகராஜன் ஆகியோர் பாராட்டுகளுக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள்.

--------------------------------

No comments:

Post a Comment